Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி பிரமாண்ட போராட்டம்

கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி பிரமாண்ட போராட்டம்

By: Karunakaran Wed, 07 Oct 2020 6:21:59 PM

கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி பிரமாண்ட போராட்டம்

கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 16 கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், 98.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் போட்டியிட்ட 16 கட்சிகளில் வெறும் 4 கட்சிகள் மட்டுமே 7 சதவீத வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றது.இதனால் மற்ற 12 கட்சிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தன. எனவே தேர்தல் முடிவுகளை ஏற்க போவதில்லை என அந்த கட்சிகள் கூட்டாக முடிவு எடுத்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

massive protests,kyrgyzstan,cancellation,general election results ,பாரிய ஆர்ப்பாட்டங்கள், கிர்கிஸ்தான், ரத்து, பொதுத் தேர்தல் முடிவுகள்

எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் பொதுமக்களும் கைகோர்த்ததால் போராட்டம் விசுவரூபம் எடுத்தது. தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 600 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தனர். இதன் காரணமாக கிர்கிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருக்கிறது.

Tags :