Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.2 லட்சம் கொரோனா பரிசோதனை

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.2 லட்சம் கொரோனா பரிசோதனை

By: Karunakaran Thu, 16 July 2020 09:17:06 AM

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.2 லட்சம் கொரோனா பரிசோதனை

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனை அதிகரிப்பால் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, மத்திய அரசு பரிசோதனைகளை அதிகரிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 1223 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று மற்றும் 3.2 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

india,corona test,coronavirus,corona prevalence ,இந்தியா, கொரோனா சோதனை, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் அதிகமான பரிசோதனை நடத்தப்பட்டது நேற்று மட்டுமே ஆகும். நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 1.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் வந்தபின் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காளம், குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மேகலயாகவில் சோதனைகளை அதிரிக்க வேணடும் என்றும், மே 25-ந்தேதி 1.5 லட்சமாக உயர்ந்த பரிசோதனை தற்போது 3.2 லட்சத்தை தொட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|