Advertisement

தமிழகத்தில் மே 5 உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 27 Apr 2023 12:46:31 PM

தமிழகத்தில் மே 5 உள்ளூர் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி திருக்கோவிலில் முப்பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் மே 5-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள மங்களதேவி கண்aணகி கோவிலில் முப்பெரும் விழா நடைபெறயிருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கண்ணகி கோவிலில் கண்ணகி உருவம் பதித்த கொடிமரம் நடப்பட்டு திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி விட்டு செல்வர்.

local holiday,chitra poornami ,உள்ளூர் விடுமுறை,சித்ரா பௌர்ணமி

இதனால் மங்களதேவி கண்ணகி கோவிலின் சித்திரை முழு நிலவு விழாவை ஒட்டி தேனி மாவட்டத்திற்கு மட்டும் வருகிற மே 5-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து கோடை விடுமுறை என்பதால் மே ஐந்தாம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மே 20 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags :