மேயர் பிரியாவின் செயல்... கான்வாய் வாகனத்தில் தொங்கியபடியே சென்றார்
By: Nagaraj Sun, 11 Dec 2022 11:57:22 AM
சென்னை: கான்வாயில் தொங்கியபடியே சென்றார்... மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா தொங்கிய படி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
தென்சென்னையில் நேற்று புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்,
சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில்,
அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப்
சிங் பேடி ஆகியோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இது
தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தலத்தில் வைரலாகி வருகிறது.