Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:45:20 PM

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: மீட்டெடுக்க வேண்டும்... தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 6957 நீர்நிலைகளில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நடத்திய நீர்நிலைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கும் கூடுதலானவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் 5 நீர்த்தேக்கக்கங்கள், 1458 ஏரிகள், 3565 குளங்கள் ஆகியவையும் அடங்கும். பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் திகழும் இந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது பெரும் தவறு ஆகும்.

water bodies,encroachment,to be removed,insistence,statement ,நீர்நிலைகள், ஆக்கிரமிப்பு, அகற்ற வேண்டும், வலியுறுத்தல், அறிக்கை

ஆக்கிரமிப்பு அளவிடப்பட்ட 4933 நீர்நிலைகளில் 1328-இல் 75% வரையிலும், 1009-இல் 75%க்கும் அதிகமாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையை உயர்நீதிமன்றம் தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை வலியுறுத்தி வருகின்றன.

எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்கவும், மீதமுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :