மாணவியிடம் தரக்குறைவாக நடந்த மருத்துவக்கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்
By: Nagaraj Thu, 01 June 2023 7:55:38 PM
செங்கல்பட்டு: மாணவர் இடைநீக்கம்... செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் கடந்த செவ்வாயன்று இளநிலை மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவியிடம், முதுநிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீயிடம் புகார் அளித்தார்.
முதுநிலை மாணவரின் செயலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதுகலை மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.