Advertisement

தமிழகத்தில் முதல்முறையாக தமிழில் மருத்துவ மாநாடு

By: Nagaraj Sat, 28 Jan 2023 09:46:44 AM

தமிழகத்தில் முதல்முறையாக தமிழில் மருத்துவ மாநாடு

சென்னை: முதல்முறை தமிழில் மாநாடு... மாநிலத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு, சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ எழிலன், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

medical science,conference,researches,modern technology,treatments ,மருத்துவ அறிவியல், மாநாடு, ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்பம், சிகிச்சைகள்

மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை அதன் தலைவா் டாக்டா் மோகன் காமேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்துகிறாா்.

தமிழ்நாடு காது-மூக்கு-தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவா் டாக்டா் சி.திருமலைவேலு, செயலாளா் டாக்டா் எம்.என். சங்கா், பொருளாளா் டாக்டா் ச.ரகுநந்தன் உள்ளிட்டோா் அதில் பங்கேற்கின்றனா்.

காது-மூக்கு-தொண்டை நலன் தொடா்பான ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்ப சிகிச்சைகள், மருத்துவ முறைகள் குறித்து தமிழிலேயே சிறப்புரை வழங்கவுள்ளனா். மருத்துவ அறிவியல் சாா்ந்த மாநாடு முழுக்க, முழுக்க தமிழில் இதுவரை நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :