திருச்சியில் போலீசார் மற்றம் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
By: Nagaraj Thu, 20 July 2023 9:24:28 PM
திருச்சி: திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாமில் சுமார் 1102 காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயனடைந்தார்கள்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி கடந்த (13.07.23)-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில், காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான பிரத்தியோகமாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியுடன் நடத்தபட்ட மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினையும், "அப்பல்லோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ்" என்கிற வாகனத்தையும் காவல் ஆணையர் சத்திய பிரியா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து 4 நாட்கள் மாநகர ஆயுதப்படையிலும், 2 நாட்கள் தில்லைநகர் அப்பல்லோ மருத்துவமனையிலும் நடைபெற்றது. இம்முகாமில் இதயம், நுரையீரல், எலும்பு, கல்லீரல், கணையம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், ECG, ECHO, X Ray என 28 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுக்களை கொண்டு முகாம் நடைபெற்றது.