Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு மருத்துவ பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு மருத்துவ பரிசோதனை

By: Karunakaran Sun, 02 Aug 2020 1:50:57 PM

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு மருத்துவ பரிசோதனை

தமிழக ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.

தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பெரும்பாலான பாதுகாவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banwarilal purohit,governor,corona virus,medical test ,பன்வாரிலால் புரோஹித், ஆளுநர், கொரோனா வைரஸ், மருத்துவ பரிசோதனை

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதன் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் திடீரென ஆளுநருக்கு கொரோனா பரிசோதனை செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது கொரோனா காலம் என்பதால், ஆளுநருக்கு முதலில் கொரோனா பரிசோதனைதான் மேற்கொள்ளப்பட்டது. இப்போதைய நேரத்தில் ஆளுநர் நலமாக இருக்கிறார். எந்த பிரச்சினையும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags :