நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் .. சென்னையில் 10 இடங்களில் முகாம்
By: vaithegi Thu, 22 June 2023 12:13:40 PM
சென்னை : சென்னை காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது. இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராகவுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது , "செந்தில் பாலாஜி உடல்நிலை சீராகவுள்ளது, அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது" என அவர் கூறினார்.