- வீடு›
- செய்திகள்›
- உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் ……… 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் ……… 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
By: vaithegi Wed, 08 June 2022 11:12:11 PM
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் ……… 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மண் வளத்தை காக்க நமது அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. மண் வளத்தை மேம்படுத்த மண் காப்போம் இயக்கம் சார்பில் லக்னோவில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு ஆகியோரின் முன்னிலையில் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சூர்யா பிரதாப் சாஹி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ் பிண்டால், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா போன்ற அதிகாரிகளும் பல ஆயிரக்கான மக்களும் பங்கேற்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் மண் வளத்தை நம்பி உள்ளனர், இதற்காக மண் வளத்தை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அரசு மற்றுமின்றி நாட்டு மக்களும் மண் வளத்தை காக்க பாடுபடவேண்டும். மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மார்ச் 21-ம் தேதி தொடங்கி வைத்தார்.
ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற பிறகு சத்குரு கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தார். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு சத்குரு சென்றார்,