Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நச்சுவாயுக்களின் அளவை கணக்கிடும் ‘மெஸன்சாட்‘ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவப்படும்

நச்சுவாயுக்களின் அளவை கணக்கிடும் ‘மெஸன்சாட்‘ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவப்படும்

By: Karunakaran Tue, 15 Sept 2020 4:38:33 PM

நச்சுவாயுக்களின் அளவை கணக்கிடும் ‘மெஸன்சாட்‘ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் ஏவப்படும்

அமீரகத்தில் தேசிய அளவில் விண்வெளித்துறையில் திறனாளர்களை மேம்படுத்தவும், ஆராய்ச்சிகளை வளர்ச்சியடைய செய்யவும் அரசு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்க செயற்கைக்கோள் தயாரிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் அபுதாபி பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்பு ஆய்வு கூடத்தில் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் ‘மெஸன் சாட்’ என்ற கியூப் வகை செயற்கைக்கோளை தயாரிக்க கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது.

அமீரக விண்வெளி ஏஜென்சி அளித்த நிதியில், அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகியவைகளின் கூட்டு முயற்சியில் ‘மெஸன் சாட்’ செயற்கைக்கோளானது கலீபா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய செயற்கைக்கோள் முழுக்க முழுக்க பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

mesensat satellite,toxic gases,launch,uae ,மெசென்சாட் செயற்கைக்கோள், நச்சு வாயுக்கள், ஏவுதல், ஐக்கிய அரபு அமீரகம்


இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன் போன்ற வாயுக்களின் அளவு மற்றும் நச்சுத்தன்மைகளை ஆராய முடியும்.

ரஷியாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் ‘சோயுஸ் 2 பி’ என்ற ராக்கெட்டில் இந்த ‘மெஸான் சாட்’ செயற்கைக்கோள் வருகிற 28-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளுடன் 14 நானோ செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் எடுத்து செல்லப்பட உள்ளது. மேலும் இந்த செயற்கைகோள் கடல்சார் உயிரின பரவல் குறித்தும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|