Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நீடிக்கும் .. வானிலை ஆய்வு மையம்

இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நீடிக்கும் .. வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Sat, 18 Feb 2023 10:48:58 AM

இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நீடிக்கும் ..  வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

weather,dry ,வானிலை ,வறண்ட

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவுள்ளது.

Tags :