Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று 13 மாவட்டங்களில் கனமழை ...வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

இன்று 13 மாவட்டங்களில் கனமழை ...வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Sun, 08 Oct 2023 3:18:13 PM

இன்று 13 மாவட்டங்களில் கனமழை ...வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவிப்பு ..தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

meteorological center,heavy rain ,வானிலை ஆய்வு மையம் ,கனமழை

இதனை அடுத்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மவைப்பகுதிகள்,

மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலுார், தியவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவித்துள்ளது வானிலை மையம்.

Tags :