Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் .... வானிலை மையம்

இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் .... வானிலை மையம்

By: vaithegi Sun, 25 Dec 2022 9:23:08 PM

இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்     ....   வானிலை மையம்

சென்னை : வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை: 25.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள். தமிழக கடலோரப்பகுதிகள். குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

25.12.2022: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக் கடல் பகுதிகள்,தெற்குகேரளகடலோரப் பகுதிகள் மற்றும்அதனைஓட்டிய தென்கிழக்குஅரபிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

meteorology,pisces ,  வானிலை மையம் ,மீனவர்கள்

இதனை அடுத்து 27.12.2022 குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியதென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள். லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவித்துள்ளது

28.12.2022:தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள். லட்சத்தீவு பகுதிகளில்' சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில்வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்டநாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்றுஅறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :