Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Tue, 01 Aug 2023 4:11:29 PM

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது.

இதனை அடுத்து இது 8.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளைதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

meteorological center,rainfall ,வானிலை ஆய்வு மையம் ,மழை

அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும், அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :