Advertisement

மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

By: vaithegi Sat, 12 Nov 2022 5:22:05 PM

மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி “12.11.2022: வட தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையடுத்து 13.11.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

warning,fishers ,எச்சரிக்கை ,மீனவர்கள்

அதைத்தொடர்ந்து 14.11.2022: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் 16.11.2022: தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்றும் தெரிவித்துள்ளது.

Tags :