உயர்தர பரீட்சை தேதி மற்றும் நடத்தும் முறை; விரைவில் அறிவிப்பதாக கல்வி அமைச்சு தகவல்
By: Nagaraj Thu, 25 June 2020 5:30:25 PM
விரைவில் அறிவிப்பு... க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உரிய துறைகளுடன் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சுக்கு
அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பாக தெளிவுபடுத்தும்போதே
அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரத்யேக வகுப்புகளுக்கு
மேலதிகமாக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வசதிகள் குறித்து ஆராயுமாறு
சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதி இதன்போது பரிந்துரை விடுத்ததாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.