Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இயங்கி வரும் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

சென்னையில் இயங்கி வரும் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

By: vaithegi Sat, 11 Feb 2023 11:44:00 AM

சென்னையில் இயங்கி வரும் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. அதாவது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு 1 முறை என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்த சேவைகளை தினந்தோறும் ஆயிரக்கணக்கிலான மக்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பயணிகள் இந்த புறநகர் ரயில் சேவைகளை செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையும், மற்றும் தாம்பரத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

metro rail corporation,ac coach , மெட்ரோ ரயில் நிறுவனம்,ஏசி பெட்டி

அந்த வகையில், செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த புறநகர் பேருந்துகளில் ஏசி பெட்டிகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஏசி பெட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் கால அவகாசம் மார்ச் 4 - ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :