Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் ஆரம்பம்

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் ஆரம்பம்

By: Monisha Thu, 10 Sept 2020 3:17:17 PM

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் சேவை, 5 மாதத்திற்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கத் தொடங்கப்பட்டது. சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி முதல் சென்னை பரங்கிமலை-சென்ட்ரல், விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை போன்ற வழிதடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மக்கள் முக கவசம், சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணித்து வருகின்றனர்.

chennai,metro rail,all route,face mask,social space ,சென்னை,மெட்ரோ ரெயில்,அனைத்து வழித்தடம்,முக கவசம்,சமூக இடைவெளி

இந்நிலையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் சென்ட்ரல்-கோயம்பேடு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. மேலும் இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மெட்ரோ ரெயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :