ஹூக்ளி நதிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
By: Nagaraj Thu, 13 Apr 2023 1:27:05 PM
கொல்கத்தா: மெட்ரோ ரயில் சோதனை .ஓட்டம்... நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதிக்கு அடியில் 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து எஸ்பிளனேட் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ரயில்சேவை தொடங்கும்போது, நதிக்கு அடியில் செல்லும் 520 மீட்டர் தூரத்தை 45 வினாடிகளில் ரயில் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tunnel |
metro |