மேட்டூர் அணை வரலாற்றில் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது
By: vaithegi Sat, 16 July 2022 11:02:57 AM
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது .முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் சற்று நேரத்தில் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை வரலாற்றில் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை நீர்மட்டம். அணைக்கான நீர்வரத்து 1.18 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.
இந்த அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.இதை அடுத்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.