மெக்சிகோ நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா தாக்கம்
By: Karunakaran Tue, 23 June 2020 09:16:24 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அதன் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 37 லட்சத்து 89 ஆயிரத்து 923 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 237 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்காவும், பிரேசிலும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. தற்போது மெக்சிகோ நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தியா 13, 699 கொரோனா உயிரிழப்புகளுடன் 8-வது இடத்தில் உள்ளன.