- வீடு›
- செய்திகள்›
- பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கண் கண்ணாடியை ஏலம் விட்ட மியா காலிஃபா
பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கண் கண்ணாடியை ஏலம் விட்ட மியா காலிஃபா
By: Karunakaran Thu, 13 Aug 2020 09:34:10 AM
கடந்த சில நாட்களுக்கு முன், லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தை சுற்றி 10 கி.மீ வரை உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன.
அரசின் அலட்சியம் காரணமாக தான் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக மக்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது. இந்த வெடிவிபத்து காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, பெய்ரூட் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.
மியா காலிஃபா, “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். இந்த ஏலத்தில் தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.