Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

கேரளாவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

By: Karunakaran Tue, 25 Aug 2020 3:18:11 PM

கேரளாவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மஞ்சுமாள் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு 14 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகே உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அந்த வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறுமியை கடத்தி சென்று 6 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்பின், சிறுமியை வீட்டில் விட்டுசென்றுள்ளனர். சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரமெல்லால் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பலமுறை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததால், சிறுமி கடந்த சில நாட்களாக மனரீதியிலான பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் சிறுமிக்கு மன நலம் தொடர்பான கவுன்சிலிங் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி அந்த சிறுமி மனநல ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார்.

migrant workers,uttar pradesh,raping,kerala ,புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உத்தரபிரதேசம், கற்பழிப்பு, கேரளா

பின்னர் இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார்மனு அளித்தனர். அதன்படி போலீசார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலார்களை கைது செய்ய அவர்கள் தங்கி இருந்த மஞ்சுமாள் பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் மட்டுமே இருந்துள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

எஞ்சிய 3 குற்றவாளிகளும் தங்கள் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. சொந்த மாநிலம் தப்பிச்சென்ற எஞ்சிய 3 வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களை கைது செய்ய கேரள போலீசார் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Tags :
|