கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதால் எல்லையில் குவிந்துள்ள புலம் பெயர்ந்தோர்
By: Nagaraj Wed, 10 May 2023 3:05:06 PM
அமெரிக்கா: எல்லையில் திரண்டு நிற்கின்றனர்... கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதால் அமெரிக்காவிற்குள் செல்ல புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் திரண்டுள்ளனர்.
3 ஆண்டுகளாக தஞ்சம் கோரிய விண்ணப்பங்களைத் தடுக்கும் டைடில் 42 எனப்படும் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கை நாளையுடன் காலாவதியாகிறது.
இதனையடுத்து மெக்சிகோ நகரமான டிஜுவானாவில் உள்ள எல்லையில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தற்காலிக பிளாஸ்டிக் கூடாரங்களின் கீழ் உள்ள அவர்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்காக காத்திருக்கின்றனர். இதனால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags :
mexico |
arrivals |