Advertisement

ஒரு வாரமாக பால் கிடைக்கலைங்க... புதுச்சேரி மக்கள் அவதி

By: Nagaraj Sat, 18 Feb 2023 9:05:28 PM

ஒரு வாரமாக பால் கிடைக்கலைங்க... புதுச்சேரி மக்கள் அவதி

புதுவை: புதுவை மக்கள் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

புதுவை மாநில மக்களின் முதல் தேர்வாக பாண்லே பால் உள்ளது. இதையடுத்து இந்த பால் நாளொன்றுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் மக்களின் தேவையாகவுள்ளது. ஆனால் கடந்த மாதம் 80 ஆயிரம் லிட்டர் மட்டுமே பால் சப்ளை செய்யப்பட்டது.

இதனால் கடுமையான பால் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடினார்கள். வெளிமாநிலங்களிலும் பால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் வெளி மாநிலங்களில் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் கூடுதல் விலை கொடுக்க முடியாமல் பாண்லே நிர்வாகம் தள்ளாடியது.

public,milk,fresh ,பொதுமக்கள் ,பால் ,புதுவை, கூடுதல் விலை,பாண்லே நிர்வாகம்

இந்நிலையில், புதுவையில் 11-வது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பூத்துகளுக்கு வழங்கப்படும் பால் சப்ளையின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பூத்துகளுக்கு வரும் பால் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது.

எனவே தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே மோதலிருந்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் வரை பால் தட்டுப்பாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|