Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு

சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு

By: vaithegi Thu, 01 June 2023 10:37:33 AM

சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு

சென்னை: ஆவின் நிறுவனம் மூலம் பச்சை, ஆரஞ்சு ,சிவப்பு, நீல நிற பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதுமட்டுமின்றி பசும்பால் விற்பனையும் செய்யப்படுகிறது.இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து 6 மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் இயற்றப்படாமல் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

cows milk,milk supply is low , ஆவின் பால்,பால் வரத்து குறைவு

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியாக நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :