மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால்..மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
By: Monisha Fri, 24 June 2022 7:31:13 PM
ராஜஸ்தான்: ராஜஸ்தானில், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரம் இரு முறை பால் வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த முயற்சி மாணவர்களுக்கு ஊட்ட சத்து கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் மாணவர்கள் அதிகம் சேர்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று அரசு நம்புவதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு பால் வழங்க படும்.
பால் பவுடர் ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து பால் பவுடர் கொள்மிதல் செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும்.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8ம் வகுப்பு 200 மில்லி பாலும் வழங்கப்படும்.