பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்கு தோண்டப்பட்ட சுரங்கம்
By: Nagaraj Mon, 31 Aug 2020 12:52:46 PM
சுரங்கத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்... பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதியை நோக்கி தோண்டப்பட்ட சுரங்கத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.
பாகிஸ்தான் பகுதியில் தொடங்கும் இந்த சுரங்கம், ஜம்முவின் சம்பா பகுதி அருகே முடிவடைவதாக எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி ஜம்வால் தெரிவித்துள்ளார்.
20 அடி நீளம் கொண்ட இந்த சுரங்கம், 3 முதல் 4 அடி விட்டம் கொண்டதாக உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கோணிப்பைகள்
சிக்கியுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
முறையாகத்
திட்டமிடப்பட்டு இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. என்றும், பாகிஸ்தான்
படையினரின் ஒப்புதல் இன்றி இந்த சுரங்கம் தோண்டப்பட்டிருக்க முடியாது என்று
எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. கூறியுள்ளார்.