இலவச மடிக்கணினி திட்டம் ... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
By: vaithegi Thu, 27 Apr 2023 12:20:58 PM
சென்னை: இன்றைய தொழில்நுட்ப உலகில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி அவசிய ஒன்றாகி விட்டது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவு வளர்க்கும் நோக்கிலும் அவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையிலும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இதன் வாயிலாக ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் நிலவிய கொரோனா கால கட்டத்தில் மடிக்கணினி வழங்கும் திட்டம் சற்று சரிவை சந்தித்தது.
இதையடுத்து இது பற்று கேள்வி எழுப்பப்பட்ட போது உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக கொள்முதலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதனால், மடிக்கணினி வழங்கும் திட்டம் சற்று தாமதமாகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பற்றி விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும் தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.