அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள்
By: vaithegi Tue, 05 Sept 2023 3:39:54 PM
சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நேற்று துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதாவது பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஜாதிய மோதல் ஏற்படாதவாறு அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சாலை விபத்துகளை தடுக்க மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெறக்கூடிய அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும்.
அதைத்தொடர்ந்து தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காலாண்டு தேர்வுக்கான பணிகளை திட்டமிட்டு விரைந்து முடிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.