- வீடு›
- செய்திகள்›
- பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கூடாது ... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிப்பு
பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கூடாது ... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிப்பு
By: vaithegi Thu, 01 June 2023 2:20:50 PM
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 -ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தின.
எனவே இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு சில தனியார் பள்ளிகள் இன்று பள்ளிகளை திறந்து மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதிக்கு முன்பாக தனியார் பள்ளிகள் திறக்க கூடாது எனபள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.