ஐ.டி சோதனையின்போது அச்சுறுத்தல் நடந்ததாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவிப்பு
By: vaithegi Wed, 08 Nov 2023 09:51:08 AM
சென்னை: சோதனைகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் ...தி.மலையில் வருமானவரி சோத்னை நிறைவு பெற்ற நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு நேரடியாக உள்ள சொத்து 48.33 ஏக்கர்தான்; எனது சொத்துகள் பற்றி வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்.
மேலும் எனது குடும்பத்தினர் வீட்டிலிருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை; திமுகவினரை குறிவைத்து சோதனை நடத்துவதற்கு அஞ்ச மாட்டோம். காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தம் இல்லை.
எ.வ.வேலு சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர். அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை;
அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளனர் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளர் நிர்பந்திக்கப்பட்டார்; கேள்வி கேட்பது தவறல்ல,அச்சுறுத்தக்கூடாது நேர்மையாக சம்பாதித்த பணத்தை கொண்டே அறக்கட்டளை, கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன் என அவர் கூறினார்.