Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் குறித்து அமைச்சர் தகவல்

மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் குறித்து அமைச்சர் தகவல்

By: Nagaraj Thu, 20 July 2023 07:50:40 AM

மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: அமைச்சர் தகவல்…. 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான படிவங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

housing,rent,applications,electricity connection,minister ,வீடுகள், வாடகை, விண்ணப்பங்கள், மின் இணைப்பு, அமைச்சர்

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை ஒருலட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்கி உள்ளனர் என்றும், மேலும் 21 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க மின் ரசீது கட்டாயமில்லை என்றும், மின் இணைப்பு எண் இருந்தால் போதுமானது என்றும் கூறிய கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெகநாதன், குடும்ப அட்டை இருந்தால் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

Tags :
|