Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீரெங்கம் கிழக்கு கோபுரம் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்

ஸ்ரீரெங்கம் கிழக்கு கோபுரம் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்

By: Nagaraj Tue, 08 Aug 2023 8:01:02 PM

ஸ்ரீரெங்கம் கிழக்கு கோபுரம் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்

திருச்சி: இடிந்து விழுந்த ஸ்ரீரெங்கம் கிழக்கு கோபுரம் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5ம் தேதி நள்ளிரவு கிழக்கு கோபுரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, கோபுர புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயில் கிழக்கு கோபுரத்தின் மேற்கூரை கடந்த 5ம் தேதி இரவு இடிந்து விழுந்தது. உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று ஆய்வு செய்தோம்.

confirmation,east,gopuram,minister,shekharbabu,srirengam, ,அமைச்சர், உறுதி, கிழக்கு, கோபுரம், சேகர்பாபு, ஸ்ரீரெங்கம்

கோவிலில் உள்ள 21 கோபுரங்களின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்பக் கழக) வல்லுநர்கள் கோபுரத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெறும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கிழக்கு கோபுர வாசலை சீர் செய்ய ரூ.1.50 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் ஓராண்டு காலம் நடைபெறும். கோவிலின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags :
|