Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவு ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவு ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Sun, 25 Dec 2022 6:42:35 PM

10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவு   ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:கொரோனா பாதிப்பு குறைவு .... சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கடந்த 15 நாட்களாகவே தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் சீனா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இன்று முதல் நடத்தப்படுகிறது எனவும், மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் எதுவும் விலக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

minister m. subramanian,corona ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்   ,கொரோனா

கொரோனா மீண்டும் சற்று தலைதூக்கி இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

இதையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே அமைச்சர் கூறியிருந்த நிலையில், கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

Tags :