Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By: vaithegi Sat, 17 Sept 2022 5:23:23 PM

எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை    ...    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை .... தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதனையடுத்து அப்போது அவர் கூருக்கையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்று தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தவறான செய்தி என்று பலமுறை தெரிவித்திருந்தாலும் கூட மீண்டும் இதுபோன்ற செய்தி வருகிறது.

minister m. subramanian,medicine ,  அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மருந்து

ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அப்படி ஆய்வு மேற்கொள்ளும்பொழுது மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கைதான் முதலில் ஆய்வு மேற்கொள்கிறோம்.

மேலும் எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டை ஒன்று அல்லது இரண்டு பேர் தேவை இல்லாமல் தெரிவித்து வருகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

Tags :