Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேவைப்பட்டால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

தேவைப்பட்டால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Sun, 01 Jan 2023 1:17:01 PM

தேவைப்பட்டால்  கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்    ...   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 9புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்கும் அரசு புற்றுநோய் மருத்துவமனை தற்போது தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளால் மிகப் பிரம்மாண்டமான சிறப்புமிக்க ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட உள்ளது.

ma. subramanian,corona ,மா.சுப்பிரமணியன் ,கொரோனா

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் பெரிதாக இல்லை, தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது கொரோனா வீரியம் இல்லாததால் கட்டுப்பாடு அவசியமில்லை, தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags :