- வீடு›
- செய்திகள்›
- கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு
கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு
By: vaithegi Wed, 21 Dec 2022 2:56:52 PM
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த 7, 8 மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முதல்-அமைச்சர் மாற்றியதுதான்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும் 2-வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி உயர்ந்துள்ளது.
கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக் ஆய்வகம் சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். கொரோனா தொற்று பரவல் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன என இவ்வாறு அவர் கூறினார்.