Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Fri, 22 Sept 2023 12:00:40 PM

கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு


சென்னை: டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட கொண்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இடையே தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோன்று செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

dengue affected,minister m. subramanian , டெங்கு பாதிப்பு , அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெசன்ட் நகர் சாலையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது , தமிழ்நாட்டில் கடந்தாண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :