- வீடு›
- செய்திகள்›
- பெண்களுக்கான உரிமை தொகை உரியவர்களுக்கு தான் வழங்கப்படும் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெண்களுக்கான உரிமை தொகை உரியவர்களுக்கு தான் வழங்கப்படும் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
By: vaithegi Sun, 26 Mar 2023 10:31:31 AM
சென்னை: பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 உரியவர்களுக்கு தான் கொடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவி ... தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 உரியவர்களுக்கு தான் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்ததாவது,
பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 உரியவர்களுக்கு கொடுக்கப்படும். "குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் 100% பேருக்கு உரிமை தொகை கிடைக்கும்.."ஏழை எளிய மக்களுக்கு 100% கிடைக்கும்.என்று தெரிவித்துள்ளார்.