Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ காலிப்பணியிடங்கள் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவ காலிப்பணியிடங்கள் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Thu, 01 Sept 2022 8:32:13 PM

மருத்துவ காலிப்பணியிடங்கள் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் ...  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான முதியோர் பிரிவு கட்டிடம், ரூ. 30 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், ரூ. 48 லட்சம் மதிப்பிலான புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் உள்ளிட்ட பல வகையான கட்டிடங்களை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவ பணியிடத்தில் பணியிடங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட நடவடிக்கை பல மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

minister m. subramanian,medical vacancy ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மருத்துவ காலிப்பணியிடம்


மேலும் அத்துடன் இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே அதன்படி புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறியுள்ளார். இதுவரை புதிதாக நிரப்பப்பட்ட 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா காலத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்களாவர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் இதுவரை பணியாளர்கள் பற்றாக்குறைவின்றி செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ கடைகளில் தற்கொலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை பல எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :