- வீடு›
- செய்திகள்›
- மருத்துவ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிக்கை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிக்கை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
By: vaithegi Wed, 26 Oct 2022 8:09:22 PM
சென்னை: மருத்துவ காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் ...... திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பொது சுகாதாரப் பணிகள் பற்றி மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதனை அடுத்து இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு, மலேரியா, எச் 1 என் 1 உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் ‘நகர்ப்புற நலவாழ்வு மையங்களை’ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் செவிலியர் பணியிடத்தில் 4,307 காலிப்பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதுவரை 1,021 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் மீதமிருக்கும் காலிப்பணியிடங்கள் இன்னும் 2 மாதங்களில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.