சான்ட்விச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுவர்களை சந்தித்த அமைச்சர்
By: Nagaraj Tue, 27 Sept 2022 12:50:37 PM
சென்னை: அமைச்சர் நலம் விசாரித்தார்... ராணிப்பேட்டை அருகே தனியார் கேண்டீனில் சான்ட்விட்ச் சாப்பிட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட 3 சிறுவர்களிடம் அமைச்சர் காந்தி நலம் விசாரித்தார்.
ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று சிறுவர்களூம் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினர்.
வீடு திரும்பிய சிறுவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
காந்தி மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் ஆகியோர்
நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
மேலும்
இன்று இரவு முழுவதும் அந்த மூன்று சிறுவர்களும் மருத்துவர் கண்காணிப்பில்
இருக்க அமைச்சர் அறிவுறுத்தி மீண்டும் அந்த சிறுவர்களை வேலூர் தனியார்
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்