Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவிப்பு

By: vaithegi Mon, 14 Nov 2022 4:29:24 PM

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பு இந்தியாவில் இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 133- வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் குழந்தைகளின் மீது அதீத அன்பு கொண்டவர் அதனால் இவரது பிறந்த நாளான நவ.14 ஆண்டுத்தோறும் குழந்தைகள் தின விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறியும் பல வித கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இதையடுத்து இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவித்துள்ளார்.

minister of education,children ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,குழந்தைகள்

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் நலனுக்காக எப்போதும் உடன் நிற்ப்போம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எந்த வித பாகுபாடும் இன்றி நட்புணர்வை வளர்ப்போம் என மாணவர்கள் இந்த நாளில் உறுதி மொழியை ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளுக்கென்று தனி உரிமைகள் உண்டு. அதனை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags :