Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் பெரியகருப்பன்

அனைத்து காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ... அமைச்சர் பெரியகருப்பன்

By: vaithegi Wed, 28 June 2023 4:23:46 PM

அனைத்து காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ...  அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை : கடந்த ஒரு மாத காலமாகவே விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாகவே விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தேனாம்பேட்டை பண்ணை பசுமை அங்காடியில் ஆய்வுக்கு பின் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

vegetable,minister periyakaruppan ,காய்கறி , அமைச்சர் பெரியகருப்பன்


இதனை அடுத்து வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வந்து உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம். மேலும் அத்துடன் உற்பத்தி சரிவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. தக்காளி விலையேற்றத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இதையடுத்து ஓரிரு நாளில் தக்காளி விலை ஏற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

மேலும் வழக்கமான கொள்முதலை விட 15 சதவீதம் அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்வர் கூறியுள்ளார். 3 முதல் 4 நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும். அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. விலையேற்றம் தொடர்ந்தால், நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். " என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :