Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By: Nagaraj Sun, 28 June 2020 1:08:08 PM

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

schools,openings,academics,parents,circumstances ,பள்ளிகள், திறப்பு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், சூழ்நிலை

இந்நிலையில் நாமக்கல் அடுத்த குமாரபாளையத்தில், ரோட்டரி அறக்கட்டளை சார்பில் 3 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா தடுப்பு பணிக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மேசை, இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. அதே நேரத்தில் சூழ்நிலை மாறும் போது கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அமைச்சர்களுடன் கலந்து பேசி எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :