Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Fri, 10 Mar 2023 11:00:55 AM

ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்   ..  அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 2.67 கோடி மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது.

இதையடுத்து 67,000 போ் மட்டும் மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மின்சார வாரியத்தைப் பொருத்தவரையில் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

minister senthil balaji,power connection ,அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு

இந்தாண்டு கோடை காலத்தில் உச்சபட்ச மின்தேவை 18, 500 மெகாவாட்டாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதேசமயம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க, மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தாண்டைப் பொருத்தவரையில், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.அடுத்தாண்டு முதல் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கத் தேவையான பணிகளை மின் வாரியம் தொடங்கியுள்ளது என அவர் கூறினார்.

Tags :