- வீடு›
- செய்திகள்›
- விரைவில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் ... அமைச்சர் செந்தில் பாலாஜி
விரைவில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் ... அமைச்சர் செந்தில் பாலாஜி
By: vaithegi Mon, 06 Feb 2023 1:51:59 PM
சென்னை: சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் .... தமிழகத்தில் கடந்த ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
மேலும் தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணத்தின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் கூறியதாவது, தேர்தலுக்கு முன் முதல்வர் அவர்கள் அளித்த வாக்குறுதி படி, விரைவில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது மின் கணக்கெடுப்பு செய்வதற்கான பணியாளர் குறைவாக உள்ளதால், இந்த முறையை செயல்படுத்த முடியாமல் உள்ளது. அதனால் முதலில் மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அத்துடன் ஸ்மார்ட் மின் மீட்டர் அமைப்பதற்கான ‘டெண்டர்’ விடும் பணிகளும் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார்.